பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஈஷா மருத்துவ உதவிகள் வழங்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிந்துள்ள சத்குரு அவர்கள், “தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் முருக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வார்கள். அந்த வகையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியை கடந்து செல்கிறார்கள்.
அவர்களுக்கு ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான பாதயாத்திரை பக்தர்களுக்கு கால்களில் ஏற்படும் வெடிப்பு, கொப்பளங்கள் மற்றும் காவடி சுமந்து வருவதால் ஏற்படும் தோள்பட்டை வலி போன்ற உடல் உபாதைகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நீர்மோரும் வழங்கப்படுகிறது.
ஈஷாவின் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் தினந்தோறும் தோராயமாக 1000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பக்தர்களுக்கு நீர்மோரும் வழங்கப்படுகிறது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு, “தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்ணாக இருந்துள்ளது. பழனி பாதயாத்திரை செல்வோருக்கு பணிவிடை செய்தது எங்களுக்கு கிடைத்த பேறு. இத்தகைய தீவிரமும் பக்தியும்தான் பாரதத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆன்மீகத்தின் நாடியை உயிர்ப்பாக வைத்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
மேலும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவையிலிருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் அங்கு இருப்பதால் பாதயாத்திரை பக்தர்கள் ஆதியோகியின் தரிசனத்தையும் பெற்று செல்கிறார்கள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.