Categories: தமிழகம்

குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்சனை: கோவையில் தாசில்தாரின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை…போலீசார் விசாரணை!!

கோவை: தாசில்தாரின் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசரணை மேற்கொண்டுள்ளனர்.

கவுண்டம்பாளையத்தை அடுத்த பாலன் நகரை சேர்ந்தவர் சபரீசன்(59). இவரது மனைவி சர்மிளா. சர்மிளா பேரூர் தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். சபரீசன் பணிக்கு செல்லாமல் இருப்பதாகவும் குடிபழக்கம் அதிகம் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி குடும்பதத்தில் தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று அவர் அவரது இல்லத்தில் கேபிள் வையர் மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரீசனுக்கு அதிக குடிபழக்கம் இருக்கின்ற காரணமாக இல்லத்தில் ஏற்படும் தகராறில் மன உளைச்சலில் இருந்ததாகவும் சில மாதங்களுக்கு முன் குடிப்பழக்கத்தை நிறுத்த சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

15 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

18 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

45 minutes ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

1 hour ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.