திண்டுக்கல் அருகே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகவே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக டாஸ்மாக் ஊழியர் புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது.
டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக எழுந்த புகார் பூதாகரமான நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து அடுத்தடுத்து இதுபோன்ற வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும், அதனால் தான் பணம் வசூலிப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் அடுத்தடுத்து புகார்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், திண்டுக்கல் அருகே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகவே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக டாஸ்மாக் ஊழியர் புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது. மடூர் புகையிலைப்பட்டி பகுதியிலுள்ள அரசு டாஸ்மாக் கடையில் நேற்று மது வாங்க சென்ற குடிமகன் ஒருவரிடம் விற்பனையாளர் ரூ. 130க்கு பதிலாக ரூ.140 கேட்டார்.
ரூ.10 அதிகமாக வாங்குகிறீர்களே ஏன் என குடிமகன் கேள்வி எழுப்ப, விற்பனையாளரோ, “குறிப்பிட்ட அதிகாரிகளின் பதவிகளை கூறி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறோம். அதனால் தான் அதிகம் வாங்குகிறோம். அனைத்து அதிகாரிகளுமே வாங்குகின்றனர்,” என்பது போல பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.