செம்பட்டி அருகே, டாஸ்மாக் பாரில் தகராறு. பார் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த, வீரக்கல் அருகே காலனி பகுதியில் அரசு டாஸ்மாக் மது கடை செயல்பட்டு வருகிறது. இந்த மது கடை அருகே பார் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (37) என்பவர் பாரில் பணியாற்றி கொண்டிருந்தார். அவருடன் வேலகவுண்டன்பட்டியைச் சேர்ந்த, பழனியப்பன் (42) என்பவர் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
மேலும் படிக்க: அதிமுக வென்றால் இன்னோவா கார், 5 சவரன் தங்கச் சங்கிலி : பரிசு அறிவித்த முன்னாள் அமைச்சர்!
அப்போது, கூத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் வெளியூரை சேர்ந்த இரண்டு பேர் என, நான்கு பேர் மது அருந்த வந்துள்ளனர். அவர்கள், பாரில் மது அருந்திவிட்டு செல்லும்போது, அவர்களிடம் பார் ஊழியர் செல்வராஜ் என்பவர், அவர்கள் சாப்பிட்ட சிக்கன், மீன், முட்டை மற்றும் குடிதண்ணீர் பாட்டில்களுக்கு (வாட்டர் பாட்டில்) பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல், நீளமான கத்தியில் செல்வராஜ் என்பவரை பயங்கரமாக தலை மற்றும் கைகளில் வெட்டி உள்ளனர்.
மேலும் படிக்க: மத்திய அரசால் வள்ளி கும்மி கலைக்கு உரிய அங்கீகாரம்… கோவையில் கும்மி ஆடி வாக்குசேகரித்த அண்ணாமலை வாக்குறுதி..!!
பின்னர் பாரில் இருந்த, உணவுப் பொருள்கள் மற்றும் சேர், டேபில் உள்ளிட்டவைகளை மது போதையில் வீசி எறிந்து, உடைத்து சேதப்படுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த, செல்வராஜ் என்பவரை, அந்த பகுதியில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து, செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, வீரக்கல் பாரில் தகராறில் ஈடுபட்டு, செல்வராஜ் என்பவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.