மதுப்பிரியர்களை கவர டாஸ்மாக் நிறுவனம் புதிய யுக்தி : தீபாவளியை முன்னிட்டு அதிரடி விருந்து…!!!
டாஸ்மாக்கில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, போன்ற விடுமுறை காலங்களில் வழக்கத்தில் இல்லாத அளவிற்கு மதுவிற்பனை இருக்கும். பொதுவாக 100 கோடிக்கு ஒரு நாள் விற்பனையாகும் என்றால் தீபாவளி சமயத்தில் 200 முதல் 300 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனையாகும் என்கிறார்கள்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அப்போது பலரும் மது அருந்துவார்கள் என்பதால் போதிய மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிமகன்கள் விரும்பும் மதுபானங்கள் அதிகப்படியாக இருப்பு வைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக 2 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
‘தண்டர்போல்ட் ஸ்டிராங்’ என்ற புதிய வகை பீர் பாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் தீபாவளியை ஒட்டி, நேற்று முன்தினம் முதல் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பீர் பாட்டிலின் விலை ரூ.160 ஆகும்.
இதேபோல் மற்றொரு ரகமாக ‘காட்பாதர்’ என்ற பீர் பாட்டிலும் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.. இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்களுக்கு வந்துள்ளன.
வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.