தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தினர்.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் ரெய்டு நடந்தது. இதில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.
இதையும் படியுங்க : மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? – திமுக அமைச்சருக்கு ஜெயக்குமார் சரமாரி கேள்வி!
இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. பாட்டிலுக்கு ரூ 10 முதல் 30 வரை கூடுதல் வசூலிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பார் உரிமங்கள் வழங்குவதிலும், அதற்கான ஒப்பந்தங்களிலும் தவறிழைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளுது.
மேலும் பார் உரிம டெண்டர்கள் முறையான KYC, GST, PAN விபரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் டெண்டர் தரப்பட்டுள்ளதாகவும், சோதனையில் ரூ.1000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, டாஸ்மாக் முறைகேடு விவகாரம் வரும் நாட்களில் பூதாகரமாக வெடிக்கும் என கூறியுள்ளார்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஊழல் குறித்து முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும், இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பும் என்றும், பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்படும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.