புத்தாண்டு கொண்டாட்டம்… டாஸ்மார்க் சேல்ஸ்மேன் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர்களால் பரபரப்பு CCTV காட்சிகள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தம்பட்டி 3393 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக மல்வார் பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார்.
புத்தாண்டு தினம் என்பதால் கடை திறந்தது முதலே பரபரப்பாக வியாபாரம் நடைபெற்று வந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் அங்கு வந்த மாரம்பாடியைச் சேர்ந்த பிரவீன் என்பவரும் அவருடன் வந்த இரண்டு பேரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பீர் பாட்டில் வாங்கியுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து திரும்ப வந்து எங்களுக்கு இந்த பீர் வேண்டாம் விலை அதிகமான பீர் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு சேல்ஸ்மேன் பாலமுருகன் அந்த பீர் விலை அதிகம் அதற்கான தொகையை கொடுத்தால் கொடுக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் பிரவீன் தரப்பினரோ பணம் அதிகமாக கொடுக்க மாட்டோம் இதுக்கு பதில் விலை அதிகமான பீர் வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
தொடர்ந்து சேல்ஸ்மேன் மறுக்கவே ஆத்திரம் அடைந்த பிரவீன் முன்பு இருந்த டேபிளை தூக்கி எறிந்து விட்டு கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை ஓங்கி கதவில் அடித்து உடைத்து சேல்ஸ்மேனை தாக்கியுள்ளார்.
மேலும் கடைக்குள் தப்பி ஓடிய பாலமுருகனை விரட்டி சென்று கடைக்குள் புகுந்து தாக்கியுள்ளார். வெளியில் நின்றிருந்த இரண்டு பேரும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்துள்ளனர்.
இதனால் டாஸ்மாக் கடை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திலிருந்து மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து பாலமுருகன் வியாபாரத்தை நிறுத்தி விட்டு டாஸ்மார்க் மேலதிகாரிகளுக்கும் வேடசந்தூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் பாலமுருகனிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டார். மேலும் டாஸ்மார்க் கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் எடுத்துச் சென்றார்.
இது குறித்து சேல்ஸ்மேன் பாலமுருகன் போலீசாரிடம் அளித்த புகாரில் பிரவீன் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து கலாட்டாவில் ஈடுபட்டதுடன் பாட்டிலை உடைத்து என்னை தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதில் பிரவீன் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது பெரியப்பாவை கொலை செய்துவிட்டு சிறையில் இருந்து தற்போது தான் வெளியில் வந்துள்ளார் என்றும், அவர் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கடை பூட்டப்பட்டிருந்ததால் மது பிரியர்கள் ஏராளமானோர் நேரம் ஆக ஆக குவிந்து கொண்டே இருந்தனர். இதனால் டாஸ்மார்க் கடை வளாகத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
This website uses cookies.