Categories: தமிழகம்

டாஸ்மாக் விற்பனையாளரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

புத்தாண்டு கொண்டாட்டம்… டாஸ்மார்க் சேல்ஸ்மேன் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர்களால் பரபரப்பு CCTV காட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தம்பட்டி 3393 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக மல்வார் பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார்.

புத்தாண்டு தினம் என்பதால் கடை திறந்தது முதலே பரபரப்பாக வியாபாரம் நடைபெற்று வந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் அங்கு வந்த மாரம்பாடியைச் சேர்ந்த பிரவீன் என்பவரும் அவருடன் வந்த இரண்டு பேரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பீர் பாட்டில் வாங்கியுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து திரும்ப வந்து எங்களுக்கு இந்த பீர் வேண்டாம் விலை அதிகமான பீர் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு சேல்ஸ்மேன் பாலமுருகன் அந்த பீர் விலை அதிகம் அதற்கான தொகையை கொடுத்தால் கொடுக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் பிரவீன் தரப்பினரோ பணம் அதிகமாக கொடுக்க மாட்டோம் இதுக்கு பதில் விலை அதிகமான பீர் வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
தொடர்ந்து சேல்ஸ்மேன் மறுக்கவே ஆத்திரம் அடைந்த பிரவீன் முன்பு இருந்த டேபிளை தூக்கி எறிந்து விட்டு கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை ஓங்கி கதவில் அடித்து உடைத்து சேல்ஸ்மேனை தாக்கியுள்ளார்.

மேலும் கடைக்குள் தப்பி ஓடிய பாலமுருகனை விரட்டி சென்று கடைக்குள் புகுந்து தாக்கியுள்ளார். வெளியில் நின்றிருந்த இரண்டு பேரும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்துள்ளனர்.

இதனால் டாஸ்மாக் கடை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திலிருந்து மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து பாலமுருகன் வியாபாரத்தை நிறுத்தி விட்டு டாஸ்மார்க் மேலதிகாரிகளுக்கும் வேடசந்தூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் பாலமுருகனிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டார். மேலும் டாஸ்மார்க் கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் எடுத்துச் சென்றார்.

இது குறித்து சேல்ஸ்மேன் பாலமுருகன் போலீசாரிடம் அளித்த புகாரில் பிரவீன் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து கலாட்டாவில் ஈடுபட்டதுடன் பாட்டிலை உடைத்து என்னை தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதில் பிரவீன் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது பெரியப்பாவை கொலை செய்துவிட்டு சிறையில் இருந்து தற்போது தான் வெளியில் வந்துள்ளார் என்றும், அவர் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடை பூட்டப்பட்டிருந்ததால் மது பிரியர்கள் ஏராளமானோர் நேரம் ஆக ஆக குவிந்து கொண்டே இருந்தனர். இதனால் டாஸ்மார்க் கடை வளாகத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!

உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…

3 hours ago

‘பேட் கேர்ள்’ டீசர் விவகாரம்…கூகுளுக்கு பறந்த நோட்டீஸ்..நீதிமன்றம் கெடுபிடி.!

படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…

4 hours ago

ரஜினியை சந்தித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்…படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.!

ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…

5 hours ago

சாய் அபயங்கருக்கு அடிச்சது ஜாக்பாட்.. முன்னணி நடிகருடன் இணைகிறார்!

பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…

5 hours ago

சிவாஜியின் வீடு பிரபுக்கு சொந்தம்…ஜப்தி உத்தரவை எதிர்த்து ராம்குமார் மனு.!

வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…

6 hours ago

போதைப்பொருள் வழக்கில் அதிரடி தீர்ப்பு…பெருமூச்சு விட்ட பிரபல நடிகை.!

5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…

7 hours ago

This website uses cookies.