தமிழகம்

அந்தரங்க உறுப்பிலும் டாட்டூ? திருச்சி ஏலியன்ஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்!

திருச்சியில், நாக்கைப் பிளந்து டாட்டூ போட்டது மட்டுமல்லாமல், அந்தரங்க உறுப்புகளிலும் டாட்டூ (Tattoo) போட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

திருச்சி: திருச்சி சிந்தாமணி வென்ஸி தெருவைச் சேர்ந்த எஸ்.ஹரிஹரன் (25) என்பவர், மேல சிந்தாமணி பகுதியில் டாட்டூ சென்டர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு மும்பை சென்றுள்ளர். அங்கு, தனது நாக்கை இரண்டாக கிழித்தும், கண்களுக்கும் டாட்டூ (Tattoo) போட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ சிலவற்றையும் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், இதுபோன்று நீங்களும் செய்து கொள்ள வேண்டும் என்றால், தன்னைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரிடம் டாட்டூ போட்டுக் கொண்டு இரண்டு பேர், இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தனர். பின்னர், இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. எனவே, மருத்துவக் கட்டுப்பாடுகளையும் மீறி, ஆபத்தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து ஸ்ரீரங்கம் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் புகார் ஒன்றை அளித்தார். இந்தப் புகாரின் பேரில், டாட்டூ சென்டர் நடத்தி வந்த ஹரிஹரன் மற்றும் அவரிடம் நாக்கைப் பிளந்து டாட்டூ குத்திக் கொண்டவரும், அவரது நண்பருமான திருவெறும்பூர் கூத்தைப்பாரையைச் சேர்ந்த வி.ஜெயராமன் ஆகியோரை கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதையும் படிங்க: “படையப்பா”படத்தில் சூரி…வெளிவந்த தகவல்…ஆச்சரியத்தில் கே.எஸ்.ரவிக்குமார்….!

மேலும் 17 வயது சிறுவனையும் எச்சரித்து போலீசார் அனுப்பினர். அது மட்டுமல்லாமல், டாட்டூ சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், உடலின் அந்தரங்க பாகங்களிலும் டாட்டூ போட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், இவ்வாறு அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ போடுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளதும், இதுவரை மூன்று பேருக்கு நாக்கு அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டதும், இதன் மூலம் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?

90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…

8 minutes ago

எத்தனை வருடம் தான் காத்திருப்பது? மீண்டும் மீண்டும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…

31 minutes ago

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

2 days ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

2 days ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

2 days ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

2 days ago

This website uses cookies.