கோவை: 13,000 மேற்பட்ட ஆட்டோக்கள் வாகன சட்ட உயர்வால் வருமானம் இழப்பு ஏற்படுவதாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு அறிவித்துள்ள வாகன சட்டத்தில் அதிகமான வரி உயர்வை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் உயர்த்தப்பட்ட வரியை ரத்து செய்ய சொல்லி மாவட்டங்களில் இருக்கின்ற போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும் பெரும் தொற்று நோய் பரவல் காரணமாக ஆட்டோக்களில் கட்டண உயர்வு மத்திய அரசு அறிவித்துள்ள வரி உயர்வை தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதித்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாளொன்றுக்கு எஃப் சி கட்டணம் 50 ரூபாய் என்றும் தரச் சான்றிதழ் பெற 600 லிருந்து 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.