உத்தமபாளையம்: தேவாரம், தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதால் அச்சமடைந்தனர். இதனால் பாதுகாப்புக்கோரி தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 900க்கும் அதிகமான பள்ளிகள் செயல்படுகின்றன.
ஏறக்குறைய ஒன்றரை லட்சம் மாணவர்கள் படிக்கும் தேனி மாவட்டத்தில், சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனியில் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களால் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில் தேவாரம் பள்ளியில் புத்தகம் கொண்டுவர கூறிய ஆசிரியரை மாணவர் தாக்கியுள்ளார். ஜி.கல்லுப்பட்டியில் மாணவர்கள் ஒன்றுகூடி ஆசிரியர்களை கிண்டல் செய்துள்ளனர். மேலும் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் கத்தியுடன் வகுப்புக்குள் வந்து ஆசிரியரை குத்த முயன்றார்.
அந்த மாணவரைக் கண்டித்ததால் தொடர்ந்து இரண்டாவது நாளாக பள்ளிக்கு வந்த அந்த மாணவன் கத்தியைக் காட்டி ஆசிரியரை மிரட்டியதாககவும், மேலும் அந்த மாணவனுக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த சிலர் மிரட்டல் விடுப்பதாவும் சொல்லப்படுகிறது
இதுகுறித்து தகவல் அறிந்ததும், டி.எஸ்.பி. மாணவரை விசாரித்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் பள்ளிக்கு கத்தியுடன் வந்து போலீசார் முன்னிலையிலேயே ஆசிரியருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனால் தற்போது ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
This website uses cookies.