கோவை: யானைகள் இறப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு நாளை கோவையில் விசாரணை நடத்துகிறது.
கோவை மற்றும் பொள்ளாச்சி வனக்கோட்ட பகுதிகள் மற்றும் தமிழகம் முழுக்க உள்ள வனப்பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில் யானைகள் இறப்பு அதிகரித்து வருகிறது.
இந்த இறப்பு குறித்து விசாரிக்க தமிழக அரசு 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சையது முசம்மில் அப்பாஸ் இந்த குழுவை அமைத்துள்ளார்.
இந்த குழுவில் சென்னை கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அன்வர்தின், வேலூர் திட்ட அதிகாரி பத்மா, மண்டல துணை வனப்பாதுகாவலர் சமர்தா மற்றும் ஓசை அமைப்பை சேர்ந்த காளிதாஸ் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் தமிழகம் முழுக்க யானைகள் இறப்பு பதிவாகியுள்ள மாவட்டங்களுக்கு யானைகள் இறப்புக்கான காரணம் குறித்தும் குறிப்பாக இளம் யானைகளின் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 8 யானைகள் இறந்துள்ளன. எனவே கோவை மாவட்டத்தில் யானைகளின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்க இந்த குழுவினர் நாளை கோவைக்கு வர உள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.