கோவை : சமூக வலைதளத்தில் கண்ணீர் அஞ்சலி அறிவிப்பு வெளியிட்டு மறுநாள் விஷம் அருந்தி உயிரை மாய்த்த வாலிபரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்பொன்முடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 28). திருமணம் ஆகவில்லை. மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் போட்டோ கிராபராக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த 6-ந் தேதி தனது புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி என அறிவிப்பு வெளியிட்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பரப்பினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். அதற்கு சுரேந்தர், விளையாட்டாக அப்படி செய்ததாக கூறி சமாளித்தார்.
இதற்காக நண்பர்களும், உறவினர்களும் சுரேந்தரை கண்டித்து இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது என அறிவுரைகள் வழங்கினர்.
இந்தநிலையில் இன்று காலை காரமடை அருகே உள்ள குட்டையூர் மாதேஸ்வரன் கோவிலுக்கு சுரேந்தர் சென்றார். அங்கு விஷம் குடித்து விட்டு தனது குடும்பத்தினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். குடும்பத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேந்தர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுரேந்தர் தற்கொலைக்கான காரணம் என்ன, காதல் விவகாரமா, அல்லது வேறு எதுவும் பிரச்சினையா என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.