கோவை : எங்களை விட்டு வெகுதூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்குவதாக மக்கள் நீதி மையத்தினர் கியாஸ் சிலிண்டர் குறித்து கோவையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் 5 மாநில தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில், பல்வேறு அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கியாஸ் சிலிண்டர்மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 80 மற்றும் 81வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மையத்தினர் கோவையில் பல்வேறு இடங்களில் கியாஸ் சிலிண்டர் குறித்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில் தோற்றம் 2014 ஆம் ஆண்டு ரூபாய் 410 என்றும் ஏற்றம் 2022ஆம் ஆண்டு ரூபாய் 980 என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கடுமையான விலை ஏற்றத்தால் எங்களை விட்டு வெகுதூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்கும் என்று முடித்து இல்லத்தரசிகள் என்று தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.