Categories: தமிழகம்

“டயரை கூட விட மாட்டீங்களா டா… ” : லாரியின் டயரை திருடிய வாலிபர்கள் கைது…!!

புதுச்சேரி : புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான டயர்களை திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி சேதராப்பட்டில் தனியார் லாரி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது, இந்த தொழிற்சாலை கடந்த 2 வருடங்களாக இயங்கவில்லை, இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு தொழிற்சாலை வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரியின் டயர்களை 4 மர்ம நபர்கள் கழற்றி டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி எடுத்து செல்ல முயன்றுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த காவலாளிகள் அர்ஜூனன் மற்றும் பக்தவத்சலம் லாரி டயரை திருடி செல்ல இருந்தவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் காவலாளிகளை தாக்கி விட்டு லாரி டயர்களை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் ஒருவர் மட்டும் காவலாளிகளிடம் சிக்கி கொண்டார். இதனை அடுத்து அவரை சேதரப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்து இச்சம்பவம் குறித்து காவலாளிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிப்பட்டவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பன்ருட்டியை சேர்ந்த சிவராமன் என்பதும், ஒட்டுனராக உள்ள அவர் தனது நண்பர்களான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன், இளவரசன், சந்திரசேகர் ஆகியோருடன் சேர்ந்து நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கும் லாரிகளில் இருந்து டயர்கள் திருடி விற்பனை செய்ய முடிவு செய்ததாகவும், நீண்ட நாட்களாக தொழிற்சாலை செயல்படாமல் உள்ளதால் அங்கு டயர் திருடியதை ஒப்புகொண்டதை அடுத்து அவரை போலீசார் புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் டயர்கள் உடன் தப்பி சென்ற அவரின் நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மூவரும் வானூர் சாலையில் டாடா ஏஸ் உடன் சுற்றி திரிவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவர்களை வானூர் கரசூர் சாலையில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது இளவரசன் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவர் மட்டும் பிடிப்பட்டனர். போலீசாரை கண்டதும் கார்த்தி என்பவர் தப்பி ஒடிவிட்டார். பிடிப்பட்டவர்களிடம் இருந்து டாடா ஏஸ் வாகனம் மற்றும் திருடப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, பிடிபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஒடிய கார்த்தி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

KavinKumar

Recent Posts

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

1 hour ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

1 hour ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

2 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

2 hours ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

2 hours ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

3 hours ago

This website uses cookies.