காரைக்கால் அடுத்த திருநள்ளாறு புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில் யானை பிரக்ருதியுடன் சிறுவர்கள் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் சனிபகவான் ஆலயத்தில் பிரக்ருதி என்ற பெண் யானை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த யானை ஆசி வழங்குவது வழக்கம்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி என்ற கட்டுப்பாடு காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கோவிலுக்கு வாடிக்கையாக வருகை தரும் காரைக்காலைச் சேர்ந்த சிவபாரதி-நாராயணன் சகோதரர்கள் யானையிடம் விளையாடி ஆசிபெற்று செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தங்கள் பெற்றோருடன் கோவிலுக்கு வந்த சகோதரர்கள் வழக்கம் போல யானையிடம் ஆசி பெற சென்ற போது, யானை கோவில் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி கொண்டிருப்பதைப் பார்த்து குஷியாகி விட்டனர். குளத்தில் குளித்த யானை பிரக்ருதியும் சிறுவர்களை கண்டவுடன் ஆர்வமாக மேலே வந்து சிறுவர்களை பார்த்து தனது வழக்கமான பிளிறல் சத்தம் எழுப்பியது. தொடர்ந்து சிறுவர்களுக்கு ஆசிகள் வழங்கி தனது துதிக்கையால் டாட்டா சொல்லி வழியனுப்பி வைத்தது. கோவில் யானையுடன் சிறுவர்கள் விளையாடும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
This website uses cookies.