தென்காசி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொந்தரவு கொடுத்த விசிக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 7 வயது மகள், குணராமநல்லூர் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியிடம், விடுதலை சிறுத்தை கட்சியின் கிளை நிர்வாகியும், குணராமநல்லூர் பஞ்சாயத்து 15வது வார்டு உறுப்பினருமான வீராசாமி (47) என்பவர் திண்பண்டம் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிச் சென்ற அந்த சிறுமியை தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி பெற்றோரிடம் கூறினால், கொலை செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதனால், அச்சத்துடன் வீடு திரும்பிய சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு பதறிப் போன பெற்றோர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை ஸ்கேன் எடுத்து பார்த்ததில், சிறுமி பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டது தெரிய வந்தள்ளது. இதனைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், சிறுமியிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். அப்போது, அவரும் உண்மையை சொல்லியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் குற்றாலம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். இதனையறிந்து விசிக கவுன்சிலர் தலைமறைவானார். பின்னர், வயலில் மறைந்திருந்த வீராசாமியை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதை ஒப்புக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி, சிறு குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.