ஆலங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை தாக்கிய வழக்கில் திமுக சேர்மனின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு பேரூராட்சியின் சேர்மனாக திமுகவைச் சேர்ந்த சுதா உள்ளார். இவரது கணவர் மோகன்லால்.
ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள், புதுப்பட்டி பறம்பு பகுதியில் கொட்டி வருகின்றனர். வழக்கம் போல குப்பையை கொட்டச் சென்ற தூய்மை பணியாளர்களான அஜித் மற்றும் இசக்கி முத்து ஆகியோரை, குப்பைகளை இங்குதான் கொட்டுவீர்களா..? எனக் கேட்டு திமுக சேர்மனின் கணவர் மோகன்லால் தாக்கியுள்ளார். மேலும், அவர்களின் செல்போன்களையும் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, திமுக சேர்மனின் கணவர் தங்களை தாக்கி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூய்மை பணியாளர்கள் சார்பில் போலீசில் நேற்று மனு அளித்தனர். ஆனால், அவர்களின் மனு மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, தங்களின் வழக்கமான பணிகளை புறக்கணித்த தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து ஆலங்குளம் போலீசார் திமுக பிரமுகர் மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.