பரந்தூரில் மீண்டும் பதற்றம்… 433 நாளாக மக்கள் போராட்டம் : ஆய்வு செய்ய வந்த குழுவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!
சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், நீர்நிலைகள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஆனால் இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பரந்தூருக்கு சென்று மக்களுக்கு நேரடியாக ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
ஏற்கனவே பரந்தூர் மக்களின் போராட்டங்களைப் பற்றி கவலைப்படாத அரசுகள், அங்கு விமான நிலையம் அமைந்தே தீரும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. இருப்பினும் பரந்தூர் சுற்றுவட்டார பொதுமக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இன்று 433-வது நாளாக இந்தப் போராட்டம் தொடருகிறது. ஏற்கனவே 6 கிராம சபை கூட்டங்களை நடத்தி இந்த திட்டத்துக்கு 13 கிராம மக்கள் எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை ஐஐடி குழு அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் குவிப்பால் இன்று காலை முதலே பரந்தூரில் பெரும் பதற்றம் நிலவியது.
இதனிடையே பரந்தூர் சென்ற ஐஐடி குழுவுக்கு எதிராக, ஐஐடி குழுவே திரும்பி போ என்ற முழக்கங்களை எழுப்பி மக்கள் உக்கிரம் காட்டினர். இதனால் ஐஐடி குழு அங்கு ஆய்வு நடத்த முடியாத நிலை உருவானது. போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தியும் மக்கள் விட்டு கொடுப்பதாக இல்லை.
பொதுமக்கள் சாலைகளில் படுத்து மறியல் போராட்டமும் நடத்தினர். இதனால் ஐஐடி குழு ஆய்வை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. பின்னர் பேராசிரியர் மச்சநாதன் தலைமையில் சில இடங்களில் ஐஐடி குழு ஆய்வு நடத்தியது. இதனால் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் நிலவியது
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.