Categories: தமிழகம்

பரந்தூரில் மீண்டும் பதற்றம்… 433 நாளாக மக்கள் போராட்டம் : ஆய்வு செய்ய வந்த குழுவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பரந்தூரில் மீண்டும் பதற்றம்… 433 நாளாக மக்கள் போராட்டம் : ஆய்வு செய்ய வந்த குழுவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், நீர்நிலைகள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஆனால் இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பரந்தூருக்கு சென்று மக்களுக்கு நேரடியாக ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே பரந்தூர் மக்களின் போராட்டங்களைப் பற்றி கவலைப்படாத அரசுகள், அங்கு விமான நிலையம் அமைந்தே தீரும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. இருப்பினும் பரந்தூர் சுற்றுவட்டார பொதுமக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இன்று 433-வது நாளாக இந்தப் போராட்டம் தொடருகிறது. ஏற்கனவே 6 கிராம சபை கூட்டங்களை நடத்தி இந்த திட்டத்துக்கு 13 கிராம மக்கள் எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை ஐஐடி குழு அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் குவிப்பால் இன்று காலை முதலே பரந்தூரில் பெரும் பதற்றம் நிலவியது.

இதனிடையே பரந்தூர் சென்ற ஐஐடி குழுவுக்கு எதிராக, ஐஐடி குழுவே திரும்பி போ என்ற முழக்கங்களை எழுப்பி மக்கள் உக்கிரம் காட்டினர். இதனால் ஐஐடி குழு அங்கு ஆய்வு நடத்த முடியாத நிலை உருவானது. போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தியும் மக்கள் விட்டு கொடுப்பதாக இல்லை.

பொதுமக்கள் சாலைகளில் படுத்து மறியல் போராட்டமும் நடத்தினர். இதனால் ஐஐடி குழு ஆய்வை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. பின்னர் பேராசிரியர் மச்சநாதன் தலைமையில் சில இடங்களில் ஐஐடி குழு ஆய்வு நடத்தியது. இதனால் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் நிலவியது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

9 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

11 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

12 hours ago

This website uses cookies.