Categories: தமிழகம்

பரந்தூரில் மீண்டும் பதற்றம்… 433 நாளாக மக்கள் போராட்டம் : ஆய்வு செய்ய வந்த குழுவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பரந்தூரில் மீண்டும் பதற்றம்… 433 நாளாக மக்கள் போராட்டம் : ஆய்வு செய்ய வந்த குழுவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், நீர்நிலைகள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஆனால் இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பரந்தூருக்கு சென்று மக்களுக்கு நேரடியாக ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே பரந்தூர் மக்களின் போராட்டங்களைப் பற்றி கவலைப்படாத அரசுகள், அங்கு விமான நிலையம் அமைந்தே தீரும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. இருப்பினும் பரந்தூர் சுற்றுவட்டார பொதுமக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இன்று 433-வது நாளாக இந்தப் போராட்டம் தொடருகிறது. ஏற்கனவே 6 கிராம சபை கூட்டங்களை நடத்தி இந்த திட்டத்துக்கு 13 கிராம மக்கள் எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை ஐஐடி குழு அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் குவிப்பால் இன்று காலை முதலே பரந்தூரில் பெரும் பதற்றம் நிலவியது.

இதனிடையே பரந்தூர் சென்ற ஐஐடி குழுவுக்கு எதிராக, ஐஐடி குழுவே திரும்பி போ என்ற முழக்கங்களை எழுப்பி மக்கள் உக்கிரம் காட்டினர். இதனால் ஐஐடி குழு அங்கு ஆய்வு நடத்த முடியாத நிலை உருவானது. போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தியும் மக்கள் விட்டு கொடுப்பதாக இல்லை.

பொதுமக்கள் சாலைகளில் படுத்து மறியல் போராட்டமும் நடத்தினர். இதனால் ஐஐடி குழு ஆய்வை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. பின்னர் பேராசிரியர் மச்சநாதன் தலைமையில் சில இடங்களில் ஐஐடி குழு ஆய்வு நடத்தியது. இதனால் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் நிலவியது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

13 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

13 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

14 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

14 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

14 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

15 hours ago

This website uses cookies.