சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதி பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகேயுள்ள செலவடை கிராமத்தில் தேங்காய் பாரம் ஏற்றிய லாரி தாரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த்து.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மானத்தாள் கிராமத்தைச் சேர்ந்த மாதையன் (30), சங்ககிரியைச் சேர்ந்த காளியப்பன் (40), ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த சாந்தி (35) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கிய ஒன்றரை வயது பெண் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். லாரி ஓட்டுநர் மது அருந்திய நிலையில் வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.