தற்போது கோடை வெயிலின் தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் திடீரென தீப்பற்றி எரிவது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
மின்சார வயர்களில் இருந்து மின் கசிவு காரணமாக குடியிருப்பு வீடுகள் நிறுவனங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென தீபற்றுவதால் அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு எச்சரிக்கை நோட்டீஸ்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து இன்று காலை கோவை புதூர் பகுதியில் அமைந்துள்ள படுக்கை தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென மின்கசிவு காரணமாக தீப்பற்றியதால் நிறுவனத்தில் தயாரித்து வைத்திருந்த படுக்கைகள் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகியது.
தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகே உள்ள மற்ற நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் விதமாக தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு வந்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து கோவைப்புதூர் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.