விருதுநகர் : தேங்காய் எண்ணெய் மில்லில் பயங்கர தீ விபத்து ரூ 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.3 மணி நேரத்திற்கு மேலாக 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க போராடினர்.
விருதுநகர் மல்லாங்கிணறு சாலையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். நகரில் முத்துராமன் பட்டியை சேர்ந்த அப்பணசாமி என்பவருக்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் ஆயில் மில் உள்ளது.
இந்த மில்லில் தேங்காயிலிருந்து ஆயில் பிரித்து எடுக்கும் வேலை நடைபெறுகிறது. வழக்கம் போல் வேலையாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இரவு நேரம் என்பதால் வேலையாட்கள் அனைவரும் இரவு உணவுவிற்காக சென்ற நிலையில் திடீரென இந்த ஆயில் மில்லில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மில்லில் தேங்காய் எண்ணெயை சேமித்து வைக்கும் சுமார் 10 லட்சம் லிட்டர் மதிப்பிலான 3 டேங்க் உள்ளது.
இது போக எண்ணெய் தயாரிக்கும் மூன்று இயந்திரங்கள் உள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை
மேலும் இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் ஊரகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.