மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் 9 மாடிகளை கொண்டது. இந்தக் கடையில் கடந்த 1ம் தேதி மாலை 4:30 மணியளவில் ஒன்பதாவது தளத்தில் உள்ள புட் கோர்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து அந்தப் பகுதி முழுவதும் கடுமையான புகை வெளியேறிய நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அந்த நிலையில் அடுத்தடுத்த தளங்களுக்கும் புகை பரவியதால் வாடிக்கையாளர்கள் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்தில் ஒன்பதாவது ப்ளோரில் இருந்த 4 ஊழியர்கள் காயமடைந்து மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒன்பதாவது தளத்தில் ஃபுட் கோர்ட் அதே போன்று அடுத்த தளத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய எலக்ட்ரானிக் மர சாமான்கள் பிளாஸ்டிக் போன்றவைகள் இருப்பதால் புகை அதிகரித்து காணப்பட்டது.
இதனை அடுத்து தீயணைப்பு தீ விபத்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சரவணா ஸ்டோர்ஸ்சில் 37 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக மாட்டுத்தாவணி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
This website uses cookies.