எதற்கெடுத்தாலும் பாரதிய ஜனதா கட்சியை வம்புக்கு இழுக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய் சுந்தரம் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சரும், கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடியார் விரைவில் வெற்றி வேட்பாளரை அறிவிப்பார்.
ஓபிஎஸ்-ஐ பொறுத்தவரை அவர் கட்சியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டார். அவருக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவராக ஏதாவது பேசிக் கொண்டு வருகிறார். ஏற்கனவே ஒரு தடவை இதைப் போன்று ஒரு செயலில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சி வரக்கூடாது என்று வாக்களித்தவர். அதற்கு அடுத்தாற் போல் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டவர்.
எனவே, இது போன்ற செயல்களில் ஈடுபடுவது நாடறிந்த உண்மையாகும். அவரது நடவடிக்கைகள் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் வகையில் உள்ளது. அந்த வேலையை தான் அவர் செய்து வருகிறார். எதற்கெடுத்தாலும் பாரதிய ஜனதா கட்சியை வம்புக்கு இழுக்கிறார். பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் பாஜக எதுவுமே கூறாத நிலையில், இவராக பேசி வருகிறார். இவரது நடவடிக்கைகள் தான் அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் உள்ளது.
அதிமுகவுக்கான இரட்டை இலையை முடக்கியவர் இவர்தான். அவர் ஒரு சுயநலவாதி. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பாஜக காரணமல்ல . இது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கேட்பது முறை. அந்த வகையில், அதிமுக அணிக்கு ஆதரவு கொடுத்தாலும், மகிழ்ச்சி கொடுக்காவிட்டாலும் மகிழ்ச்சி, என தெரிவித்தார்.
பாராளுமன்றம் கூடுவது தொடர்பாக அதிமுக சார்பில் ரவீந்திரநாத்தை அழைத்திருக்கிறார்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு. பதிலளித்த அவர், “ஒருவர்தான் எம். பியாக இருக்கிறார். அவரை நாங்கள் கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கி விட்டோம். அவர் ஒருவர் மட்டும் இருப்பதால் அவரை அழைத்துள்ளார்கள். பா.ம.க.வை பொருத்தவரை யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்து விட்டார்கள். அவர்கள் வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டாலும் மகிழ்ச்சி,” எனக் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், பகுதி கழகச் செயலாளர்கள் ஜெவின் விசு, முருகேஸ்வரன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.