தாமிரபரணி நதியில் தண்ணீர் இல்லாததால் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதியானது வற்றாத ஜீவநதியாக உள்ளது. மேலும், இந்த நதியானது தமிழகத்தில் பொதிகை மலையில் தொடங்கி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கும். தமிழகத்தில் தொடங்கி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரு சிறப்பு நதியாக உள்ளது.
தாமிரபரணி நதியானது கடந்த சில வருடங்களாக குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என சமூக ஆர்வலர்களும், அறிஞர்களும் ஆய்வுகளை செய்து அதனை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தாமிரபரணி வடகால் வாய்க்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக தண்ணீர் இல்லாததால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால், வாய்க்காலில் உள்ள மீன்கள் அனைத்தும் குவியல் குவியலாக செத்து மிதக்கிறது. மேலும், செத்து மிதக்கும் இந்த மீன்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மிகவும் பாரம்பரியமிக்க மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் போற்றக்கூடிய இந்த வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் தண்ணீர் இல்லாததால் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.