அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை, விடுதலை சிறுத்தை கட்சியினர் மாலை அணிவிக்க கூடாது என வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் அவரது சிலைக்கும், புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர், தாங்கள் நிறுவிய சிலை, எனவே பாஜகவினர் மாலை அணிவிக்க கூடாது என்றும், எங்கள் கோட்பாடு தவறு என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜகவினர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலை உள்ளதால் தாங்கள் மாலை அணிவித்தே தீருவோம் என கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அந்த பகுதியில் குவிந்த காவல்துறையினர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவினரை கலைந்து செல்ல கூறினர். இருந்தபோதிலும் அந்த இடத்திலேயே தங்கள் மாலை அணிவிப்பதாக கோரி அம்பேத்கரின் புகைப்படத்தை எடுத்து வந்து படத்திற்கு மாலை அணிவித்து கோஷங்களை எழுப்பிய கலைந்து சென்றனர்.
இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழலால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் ஒரு பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
This website uses cookies.