அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை, விடுதலை சிறுத்தை கட்சியினர் மாலை அணிவிக்க கூடாது என வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் அவரது சிலைக்கும், புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர், தாங்கள் நிறுவிய சிலை, எனவே பாஜகவினர் மாலை அணிவிக்க கூடாது என்றும், எங்கள் கோட்பாடு தவறு என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜகவினர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலை உள்ளதால் தாங்கள் மாலை அணிவித்தே தீருவோம் என கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அந்த பகுதியில் குவிந்த காவல்துறையினர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவினரை கலைந்து செல்ல கூறினர். இருந்தபோதிலும் அந்த இடத்திலேயே தங்கள் மாலை அணிவிப்பதாக கோரி அம்பேத்கரின் புகைப்படத்தை எடுத்து வந்து படத்திற்கு மாலை அணிவித்து கோஷங்களை எழுப்பிய கலைந்து சென்றனர்.
இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழலால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் ஒரு பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.