தஞ்சையில் கழிவறை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பிரபல ஆடிட்டர் மகேஷ்வரன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தஞ்சை சேர்வைக்காரன் தெருவில் வசித்து வந்தவர் மகேஷ்வரன். பிரபல ஆடிட்டரான இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவறையை அதிக பணம் கட்டி ஏலம் எடுத்துள்ளார். இதனால், கார்த்தி என்பவருக்கும் ஆடிட்டர் மகேஷ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆடிட்டர் மகேஷ்வரன் நேற்று இரவு தனது தோட்டத்து வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்த போது, கார்த்தி, அர்ச்சுணன், மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேர் அங்கு வந்து அவருடன் அமர்ந்து சகஜமாக பேசி உள்ளனர்.
தண்ணீர் குடிப்பதற்காக மகேஷ்வரன் எழுந்து சென்றபோது, பின்புறம் இருந்து அவரை நான்கு பேரும் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சடலமானார். ஆடிட்டர் உயிர் இழந்ததை உறுதி செய்த கும்பல் அங்கு இருந்து தப்பி சென்றது.
தகவல் அறிந்து வந்த தஞ்சை மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா, டி.எஸ்.பி கபிலன் ஆகியோர் ஆடிட்டர் மகேஷ்வரன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கழிவறை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆடிட்டர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய கொலையாளிகள் 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.