தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கயிறு இழுத்தல் போட்டியில் கயிறு அறுந்து விழுந்ததில் மேயர், துணை மேயர் உள்பட அனைவரும் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாநகராட்சியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மியூசிக்கல் சேர், லெமன் இன் தி ஸ்பூன், உறியடிப்போட்டி, சாக்கு போட்டி, கயிறு இழுத்தல் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் கயிறு இழுத்தல் போட்டியில் ஆண்கள், பெண்கள் என சரிசமம் என்று நிரூபிக்கும் வகையில், ஒருபுறம் மேயர் சன்.ராமநாதன் மற்றும் ஆண் மாமன்ற உறுப்பினர்களும், மற்றொருபுறம் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆணையர் உமா மகேஸ்வரி மற்றும் பெண் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இருதரப்பினரும் தங்களுடைய பலத்தை நிரூபிக்க போட்டி போட்டுக்கொண்டு கயிறை இழுத்தனர். அப்போது, எதிர்பார்க்காத விதமாக, சட்டென்று கயிறு அறுந்தது. இதில் மேயர், துணை மேயர், ஆணையர் உட்பட அனைவரும் கீழே விழுந்தனர்.
இது அங்கு கூடி நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இடையே பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆண்களுக்கு பெண்கள் நிகர் என இந்த போட்டியின் மூலம் நிரூபிக்கப்பட்டது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.