தஞ்சை : தஞ்சாவூரில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், போலீசார் போதை தெளிய வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா..? என போலீசார் பல்வேறு இடங்களில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதற்காக, தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ரோந்து பணியில் ஈடுபடும் போது, தஞ்சை கீழ வாசல் பகுதியில் மது தலைக்கேறிய போதையில் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் போதையில் இருந்தது உறுதியானது. பின்னர், அந்த நபரின் தலையில் தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
This website uses cookies.