Categories: தமிழகம்

அரசு இடத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டிய குடும்பம்… நீதிமன்ற உத்தரவுப்படி இடித்துத் தள்ளிய அதிகாரிகள்…!!

தஞ்சை : அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டியதை, அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அப்புறப்படுத்தினர்.

கும்பகோணம் அருகேயுள்ள சீனிவாசநல்லூரில், கும்பகோணம் காரைக்கால் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை வரதராஜன், அறிவிற்கரசு, விமல், ஆண்டாள் மற்றும் முருகன் ஆகிய ஐந்து குடும்பத்தினர், ஆக்கிரமிப்பு செய்தும், தங்கள் வீட்டிற்கு அனுமதியில்லாமல் பாலம் கட்டியதாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில் அவற்றை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன், ஆகியோர் முன்னிலையில் பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் உதவியோடு, தூர்க்கப்பட்டிருந்த வாய்க்காலை மீண்டும் தூர்வாரியும், ஆக்கிரமித்த இடங்களை மீட்டு, அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த பெரிய பாலங்களையும் பொக்லைன் இயந்திர உதவியோடு முழுமையாக இடித்து அகற்றினர்.

அப்போது சம்மந்தப்பட்ட ஐந்து குடும்பத்தினரும், பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும், நாங்கள் பாமக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால், தற்போது உள்ள திமுக எம்பி ராமலிங்கம் தூண்டுதலின்பேரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று விமல் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு அகற்ற வந்த கோட்டாசியர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவுபடி, தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

21 minutes ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

44 minutes ago

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…

1 hour ago

கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!

100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…

2 hours ago

டீயில் எலி மருந்து காதலனுக்கு கொடுத்த காதலி.. என்னது அண்ணனா? விழுப்புரத்தில் பகீர்!

விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…

2 hours ago

எங்களை விட்டுப் போகாதீர்கள்.. தேனியிம் ஓபிஎஸ்சை கடுமையாக தாக்கிப் பேசிய இபிஎஸ்!

எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…

3 hours ago

This website uses cookies.