தஞ்சை : தஞ்சையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பல கோடி மதிப்புள்ள 14 சிலைகள் மீட்பு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடியாக மீட்டனர்.
தஞ்சையை சேர்ந்தவர் கணபதி. இவர் தஞ்சையில் ஆர்ட் வில்லேஜ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் பழங்கால சிலைகளை முறையான ஆவணம் இன்றி வைத்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டி தலைமை டி.ஜி.பி டாக்டர் ஜெயந்த் முரளி, போலீஸ் சூப்பிரண்டு ரவி, மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதிரடி திட்டத்தை வகுத்தனர். அதன்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி, டி.எஸ்பி. கதிரவன் தலைமையில் , இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் 12 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, முறையான ஆவணங்கள் ஏதுமின்றி பழங்கால சிலைகளை கணபதி வைத்திருந்தது தெரியவந்தது. பெருமாள், ரிஷபதேவர், சிவகாமி அம்மன், மகாவீரர் உள்ளிட்ட 14 சிலைகள் எந்தவித ஆவணமின்றி அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து, 14 சிலைகளையும் போலீசார் மீட்டு கணபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.