அண்ணனை கொலை நபரை அதே இடத்தில் 2 வருடத்திற்கு பிறகு வெட்டி பழிக்கு பழி தீர்த்த தம்பி, ஊர்மக்களின் முன்பு போலீஸில் சரணடைந்தார்.
தஞ்சை அருகில் உள்ள துலுக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுளுக்கி மணி என்பவரை அதே ஊரை சேர்ந்த சுபாஷ் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு சியாமளாதேவி அம்மன் கோவில் திருவிழாவின் போது வெட்டி கொலை செய்தார். இதனால், மணியின் தம்பி ஜோதிராஜன் சுபாஷை பழி தீர்க்க காத்து இருந்தார்.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சியாமளா தேவி அம்மன் கோவில் திருவிழா 12ம் தேதி கிடாவெட்டுடன், மஞ்சள் தெளிப்பு விழாவோடு சிறப்பாக நடந்தது. விழாவில் சுபாஷ் அருவாளை காட்டி ஊர் மக்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஊர் திருவிழாவில் சுபாஷை கண்ட ஜோதிராஜன், இதே விழாவில் தனது அண்ணன் மணியை கொலை செய்த சபாஷை பழிதீர்க்க திட்டமிட்டார்.
ஊர்மக்களை மிரட்டி வந்த சுபாஷை ஜோதிராஜனும், அவரது மைத்துனர் சிவக்குமாரும் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து பழி தீர்த்தனர். பின்னர் ஊர் மக்கள் மத்தியில் போலீசாரிடம் அருவாளை கொடுத்து ஜோதிராஜன் சரணடைந்தார். பின்னர் ஜோதிராஜன், சிவக்குமார் இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.