அண்ணனை கொலை நபரை அதே இடத்தில் 2 வருடத்திற்கு பிறகு வெட்டி பழிக்கு பழி தீர்த்த தம்பி, ஊர்மக்களின் முன்பு போலீஸில் சரணடைந்தார்.
தஞ்சை அருகில் உள்ள துலுக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுளுக்கி மணி என்பவரை அதே ஊரை சேர்ந்த சுபாஷ் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு சியாமளாதேவி அம்மன் கோவில் திருவிழாவின் போது வெட்டி கொலை செய்தார். இதனால், மணியின் தம்பி ஜோதிராஜன் சுபாஷை பழி தீர்க்க காத்து இருந்தார்.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சியாமளா தேவி அம்மன் கோவில் திருவிழா 12ம் தேதி கிடாவெட்டுடன், மஞ்சள் தெளிப்பு விழாவோடு சிறப்பாக நடந்தது. விழாவில் சுபாஷ் அருவாளை காட்டி ஊர் மக்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஊர் திருவிழாவில் சுபாஷை கண்ட ஜோதிராஜன், இதே விழாவில் தனது அண்ணன் மணியை கொலை செய்த சபாஷை பழிதீர்க்க திட்டமிட்டார்.
ஊர்மக்களை மிரட்டி வந்த சுபாஷை ஜோதிராஜனும், அவரது மைத்துனர் சிவக்குமாரும் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து பழி தீர்த்தனர். பின்னர் ஊர் மக்கள் மத்தியில் போலீசாரிடம் அருவாளை கொடுத்து ஜோதிராஜன் சரணடைந்தார். பின்னர் ஜோதிராஜன், சிவக்குமார் இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.