தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு விட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த பருத்தியப்பர் கோவிலைச் சேர்ந்த மாணவி கடந்த சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணித ஆசிரியர் சசிகுமார் வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் தரக்குறைவாக திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் சித்தப்பா அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் சசிகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கணித ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுது அவரை செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதை டிக் டாக்கில் அவரை, ‘ஓசி சோறு திண்ணும் சோத்தப்பன்,’ என்கிற பாணியில் இழிவாகவும், கேவலமாகவும் 19 வினாடிகள் டிக் டாக் செய்து அதை தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார்.
இதனைப் பார்த்த பள்ளி நிர்வாகம் மற்றும் கணித ஆசிரியர் மாணவியை அழைத்து வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியது தொடர்பாகவும், டிக் டாக் செய்து இருப்பது குறித்தும் ஆசிரியர் கண்டித்திருப்பதாகவும் ஆசிரியர் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, ஆசிரியர் மீது எந்தத் தவறும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.