தஞ்சை : தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1000 கிலோ குட்கா, 110 லிட்டர் போலி மதுபான பாட்டில்களை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தஞ்சையில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பல பார்களில் போலி மது பானங்கள் விற்கப்படுவதாகவும் வந்த தொடர் புகாரை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, தஞ்சை கரந்தை குடைக்காரத் தெருவில் வசித்து வரும் பிரபு என்பவரது வீட்டில் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டில் கட்டுக்கட்டாக 1000 கிலோ குட்கா, லேபில் இல்லாமல் 110 மதுப் பாட்டில்கள் இருந்ததை அடுத்து, அவற்றை பறிமுதல் செய்து, பிரபுவை கைது செய்து, அவர் பயன்படுத்தி வந்த காரையும் கைப்பற்றினர்.
பிரபுவிடம் நடத்திய விசாரணையில், திருவையாறு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக குட்கா பதுக்கி வைத்து இருந்ததும், போலி மதுப்.பாட்டில்கள், தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள செம்மீன் பாரில் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து, பிரபுவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.