தஞ்சை கீழவாசல் பகுதியில் டீ கடையில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் காயம் அடைந்தார். இரண்டு, இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்புக் கூடானது.
தஞ்சை கீழவாசல் நான்கு வழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது கண்ணையன் டீ ஸ்டால். கடையின் முன்பு சிலிண்டர் அடுப்பில் வைத்து பலகாரம் சுடும் போது, எதிர்பாரதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி உள்ளது.
இதனை பலகார மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீப்பற்றத் தொடங்கியது. இதனை அடுத்து, டீ கடைக்குள் இருந்தவர்கள், டீ அருந்தி கொண்டு இருந்தவர்கள் அங்கு இருந்து தப்பினர். இருந்த போதிலும், டீ கொளுந்து விட்டு எரிந்ததில், கடை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடானது.
கடை உரிமையாளர் பாலமுருகனுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்து குறித்து தஞ்சை கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.