கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஆர்கெஸ்ட்ரா மற்றும் நடன குழு ஒன்று நேற்று இரவு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இன்று காலை மீண்டும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி டாடா சுமோ காரில் வந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளமடம் லாயம் விளக்கு பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது நாகர்கோவிலில் இருந்து ரோஸ் மியாபுரத்திற்கு சென்ற அரசு பேருந்து மற்றும் டாட்டா சுமோ கார் நேருக்கு நேர் அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காரில் இருந்தவர்கள் மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் 12 பேர் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்துள்ளனர்,அவர்கள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டாட்டா சுமோவின் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
This website uses cookies.