திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (43).கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகின்றார்.
காளிவேலம்பட்டி பிரிவில் புதியதாக கட்டப்படும் கட்டிடத்தில் பணி புரிந்து வருகின்றார்.இன்று மதிய உணவு இடைவெளியின் போது கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழி பாதையில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.சாலையை கடக்க முயன்ற போது கோவை நோக்கி சென்ற சொகுசு கார் சுரேஷின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சாலையில் மையத்தில் இருந்த தடுப்புச்சுவர் மீது விழுந்து பலத்த காயமடைந்தார்.விபத்தினை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சுரேஷை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார்.சுரேஷ் தூக்கி வீசப்படும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.