திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலசுப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த 27 ஆம் தேதி சென்னையில் இருந்து பெண் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார். லக்ஷ்மி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், செந்தில்குமார் பயன்படுத்தும் ஏர்டெல் மொபைல் எண்ணுக்கு குலுக்கல் முறையில் அரை சவரன் தங்க நகை பரிசு விழுந்துள்ளதாகவும், அதை கொரியரில் அனுப்பி வைப்பதாகவும் 650 ரூபாய் மட்டும் பணம் செலுத்தி பரிசு பொருளை வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: தட்டினால் தங்கம்.. வெட்டினால் வெள்ளி..வாயால் வடை சுட்டு ஆட்சியை பிடித்த திமுக : ஹெச் ராஜா விமர்சனம்!
செந்தில்குமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போன்று 25,000 ரூபாய் மொபைல் போன் பரிசாக வந்துள்ளதாகவும் 1650 ரூபாய் மட்டும் செலுத்தி பரிசு பொருளை வாங்கி கொள்ளுமாறு வந்த தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தைக் கட்டி பரிசு பொருளை வாங்கி பார்த்த போது 100 ரூபாய் மதிப்பிலான ஹெட் போன் மட்டும் அனுப்பப்பட்டிருந்தது.
இதுகுறித்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் தான் இழந்த பணத்தை ஆறு மாதங்கள் கழித்து செந்தில்குமார் திரும்ப பெற்றுள்ளார்.
இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணிய செந்தில்குமார் 650 ரூபாய் பணம் செலுத்தி பார்சலை வாங்கியுள்ளார்.
திறந்து பார்த்தபோது அவர் எதிர்பார்த்தபடியே கவரிங் வளையல்கள் பரிசு பொருளாக அனுப்பப்பட்டிருந்தது. ஏழை மக்களை குறிவைத்து நடக்கும் இந்த மோசடிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஏமாற்றப்பட்டதாகவும் சட்டரீதியாக தான் இழந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டேன் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மீண்டும் இந்த பொருளை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.