தமிழகம்

மகள்களை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவை எடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. அலறிய மனைவி : வேலூர் அருகே அதிர்ச்சி!

ராணிப்பேட்டைமாவட்டம்,சோளிங்கர் அருகேயுள்ள வேலம் பகுதியை சேர்ந்த தம்பதியர்களான ராஜி(45) இந்திரா(41) இவர்களுக்கு அகல்யா(22) சரண்யா(17) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜி ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வரும் நிலையில் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் கடன் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் ராஜி நேற்று இரவு தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் இணைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவை எடுத்துள்ளார்

அப்போது முதலாவதாக வீட்டில் உள்ள அறையில் தனது இரண்டு மகள்களையும் தூக்கில் தொங்க விட்டுவிட்டு வெளியே உள்ள அறையில் ராஜி மற்றும் இந்திரா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர்

மேலும் படிக்க: வகுப்பறையில் கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள்… பதறிய ஆசிரியர் : அரியலூரில் அதிர்ச்சி!!

அப்போது தனது மகள்கள் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்த இந்திரா கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தை சேர்ந்த உறவினர்கள் வந்து பார்த்தபோது அதிர்ச்சடைந்ததோடு உடனடியாக தூக்கில் தொங்கப்பட்டு இருந்த இரண்டு பெண் களையும் மீட்டுள்ளனர்

அப்போது அவர்கள் இருவரும் சுயநினைவை இழந்து மயக்கமாக இருந்ததை கண்ட ராஜி தனது மகள்களின் சாவுக்கு நான்தான் காரணம் என எண்ணி வாலாஜா தண்டலம் பகுதிகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

மேலும் அகல்யா மற்றும் சரண்யா ஆகிய இருவரும் வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் சம்பவங்கள் குறித்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

5 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

6 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

7 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

8 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

9 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

9 hours ago

This website uses cookies.