திருச்சி : திருச்சியில் தேர்தல் மனு தாக்கல் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் வந்த பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி நாளை முடிவடைய உள்ளது. இந்த நிலையில் திருச்சியில் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் பாஜகவினர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்ய நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்றனர். பின்னர் வேட்பாளருடன் அனைவரும் மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் செல்ல முற்பட்டனர்.
அவர்களை காவல்துறையினர் அனுமதிக்காத நிலையில் பாஜகவினரும் காவல்துறையில் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ஆளும் கட்சியைத் சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்யும் போது இரண்டுக்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்படும் போது எங்களை ஏன் அனுமதிக்கவில்லை எனக் கோஷமிட்டு அலுவலகத்தில் முற்றுகையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். பின்னர் வேட்பாளர் மற்றும் அவருடன் இரண்டு பேர் மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர்.இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.