நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில், பாஜக சார்பில் களம்காணும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர், வேலூர், தஞ்சை, கடலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 14 மாநகராட்சிகளில் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், திருச்செங்கோடு, நாமக்கல், தருமபுரி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் பாலகோடு, நாட்றாம்பள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது.
14 மாநகராட்சிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக, சென்னையில் முதல் கட்டமாக 141 வார்டுகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.