நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில், பாஜக சார்பில் களம்காணும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர், வேலூர், தஞ்சை, கடலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 14 மாநகராட்சிகளில் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், திருச்செங்கோடு, நாமக்கல், தருமபுரி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் பாலகோடு, நாட்றாம்பள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது.
14 மாநகராட்சிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக, சென்னையில் முதல் கட்டமாக 141 வார்டுகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
This website uses cookies.