கோவை ; கோவையில் நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மேகலபிரியா. 26 வயதான இவர், கடந்த ஓராண்டாக கோவை காந்திபுரம் கொங்குநாடு மருத்துவமனை அருகே அமைந்துள்ள நியூரோ பெர்க் டயாக்னசிஸ் செண்டரில் பணியாற்றி வந்துள்ளார். ரத்தினபுரி அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.
நேற்று இரவு வழக்கமாக பணிக்கு சென்று இரவு அறைக்கு வந்துள்ளார். இன்று நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் பக்கத்து வீட்டார் கதவை தட்டியபோது திறக்கவில்லை. ஜன்னல் வழியே பார்த்தபோது நிர்வான கோலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து, அவர் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரத்தினபுரி காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவரது பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கோவைக்கு வந்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. காதல் பிரச்சினை காரணமாக பெண் தற்கொலையில் ஈடுபட்டாரா..? அல்லது வேறு ஏதேனும் கொலை சம்பவங்கள் இருந்ததா..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.