Categories: தமிழகம்

மயானத்தில் அரை நிர்வாணமாக கிடந்த வாலிபர் சடலம் : கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை…

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மயானத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள மயானத்தில் இறந்த ஒருவரின் அஸ்தி உறவினர்கள் எடுக்கச் சென்றபோது, பிணம் எரித்த இடத்தின் அருகே அரை நிர்வாணமாக வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு இறந்த வாலிபர் திண்டுக்கல் மேற்கு மரியாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கார்த்திக் ராஜா என தெரியவந்தது.

இவர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விவாகரத்து நடந்துள்ளது. இவர் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நேற்று வேடப்பட்டி அருகே உள்ள குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. வாலிபரை கொலை செய்து பிணம் எரிந்த இடத்தின் அருகே போட்டு விட்டுச் சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

KavinKumar

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

46 minutes ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

48 minutes ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

1 hour ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

3 hours ago

This website uses cookies.