கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் வாகன நிற்கும் இடத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றார்.
அப்பொழுது அங்கு பதுங்கி இருந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி விட்டு அந்த பயிற்சி பெண் மருத்துவர் மீது பாய்ந்து தவறாக நடக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர் அந்த வாலிபரை தள்ளிவிட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு காவலாளி ஓடி வந்தார். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடினார்.
இது பற்றி சக பயிற்சி மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் தெரிவித்தார். இதற்கிடையில் நள்ளிரவில் ஒரு மணி அளவில் அதே வாலிபர் சிறிய காயத்துடன் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்.
அவரை அடையாளம் கண்டு கொண்ட பயிற்சி மருத்துவர்கள் மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் காவல் துறை நடத்திய விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மயான்க் கலார் என்பது தெரிய வந்தது.
மேலும் அவருடன் கோவைக்கு வந்தவர்கள் ரயில் நிலையத்தில் தனியாக விட்டு, விட்டு சென்றதாகவும், இதனால் அவர் அங்கே மூன்று நாட்கள் சுற்றித் திரிந்ததாகவும், தெரிவித்ததாக தெரிகிறது.
சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருக்கும் அந்த வாலிபரை காவல் துறை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.