கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மணலூர் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் விஜயகுமார் (வயது 32). செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர்.
சித்ரா நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய நவீன் என்ற சிறுவன் சித்ராவை கேலி கிண்டல் செய்துள்ளான்.
இது குறித்து சித்ரா தனது கணவரிடம் கூற, இதையடுத்து விஜய்குமார், ராஜேந்திரன் மகன் நவீனை தட்டிக் கேட்டதுடன் கத்தியால் கழுத்து பகுதியில் கீரியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த சிறுவன் கஞ்சா போதையில் தனது வீட்டில் கத்தியை எடுத்து விஜயகுமாரின் கழுத்தில் குத்தியுள்ளார்.
விஜயகுமார் ரத்தம் கொட்டிய நிலையில் பகுதியில் கிடைக்க, அப்பகுதி மக்கள் விஜயகுமாரை விருத்தாசலம் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தபோது,அவரை பரிசோதித்த மருத்துவர் விஜயகுமார் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.
இதனை எடுத்து உயிரிழந்த விஜயகுமார் உடல் விருதாச்சலம் அரசு மருத்துவமனை பிணவ அருகில் உடற்கூறு ஆய்வுக்கு வைக்கப்பட்டது.
இதனையடுத்து,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.