கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தாசம்பாளையம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தாசம்பாளையம் வெள்ளீஸ்வரன் மலை பகுதியை சேர்ந்தவர் சரத் குமார்(26). இவருக்கும் வனஜா (23) என்பவருக்கும் திருமணம் ஆகி ஹரி விக்னேஷ் என்ற 3 வயது குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அப்பகுதி சிறுவர்கள் வீட்டின் அருகே உள்ள சரத்தின் பெரியம்மா உமாபதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை ஹரி விக்னேஷ் தவறி விழுந்து விட்டார்.
நீண்ட நேரமாகியும் மகனை காணவில்லை என்று பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி கொண்டிருந்தனர். இந்த நிலையில் தனது பெரியம்மா உமாபதி வீட்டு முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் தனது மகன் தவறி விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் தாசம்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.