Categories: தமிழகம்

தேமுதிக பிரமுகரின் தம்பி சுட்டுக்கொலை.. காஞ்சி என்கவுன்டர் சம்பவத்தில் அதிர வைக்கும் பின்னணி!!!

தேமுதிக பிரமுகரின் தம்பி சுட்டுக்கொலை.. காஞ்சிபுர என்கவுன்டர் சம்பவத்தில் அதிர வைக்கும் பின்னணி!!!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர் மேடு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபா என்ற பிரபாகரன். வயது 35. ஏ நிலை ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் நான்கு கொலை வழக்குகளும் 25 க்கும் மேற்பட்ட , கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ரைஸ் மில் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக பிரபாகரன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை புதுப்பாளையம் தெருவில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து காவல் நிலையத்தில் கையொப்பம் இட நடந்து செல்ல முயன்ற போது பிரபாகரனை காரில் வந்த 4 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் படுகொலை செய்து விட்டு காரில் ஏறி தப்பினர்.

சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் ஏடிஎஸ்பி என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். அதேபோல் மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

காவல்துறையினரின் விசாரணையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தேமுதிமுக கட்சியின் நிர்வாகி சரவணன் கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் விதமாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள சரவணனின் உடன் பிறந்த தம்பி ரகு என்பவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என தெரியவந்தது.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்வதில் ஒரு சொகுசு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் இருந்து இறங்கி வந்து பிரபாகரனை கண்டம் துண்டமாக கொலை செய்துவிட்டு காரில் ஏறி தப்பியது தெரியவந்தது.

அதனைதொடர்ந்து பிரபாகரன் கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் மூன்று தனிப்படைகள் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் கொலை வழக்கில் மறைந்த தேமுதிக பிரமுகர் சரவணனின் தம்பி ரகு (எ) ரகுவரன் மற்றும் கருப்பு பாட்ஷா (எ) ஹசைன் ஆகிய இருவரையும் கைது செய்து காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே இந்திராநகர் சர்வீஸ் சாலையில் வைத்து மார்பு மீது காவல்துறையினர் என்கவுண்டர் செய்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

“எப்போதும் போல” குற்றவாளிகள் தப்ப என்ற போது குற்றவாளிகள் தாக்கியதில் சிவகாஞ்சி காவல்நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகியோர் காயம் அடைந்தனர் . அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ரவுடிகள், மாவட்டத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அவர்களை எலலாம் என்கவுண்டர் செய்யாமல் விட்டுவிட்டு, சிறுசிறு குற்றங்களை செய்து வருகின்ற, பலம் இல்லாத ரவுடிகளை என்கவுண்டர் செய்து இதன் மேலும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு உள்ளது என நிரூபிக்க மாவட்ட காவல்துறை முயற்சி செய்வதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

5 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

7 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

8 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

8 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

9 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

10 hours ago

This website uses cookies.