ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மீன் வியாபாரி கொலை செய்த சம்பவம் குறித்து மனைவி, மகள் மற்றும் மகளின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஞானசேகர் (வயது 42). இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சலைத்ராணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது வீடு அருகில் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்ற கார்த்திக் (வயது 24) என்பவர் மரப்பட்டறை வைத்துள்ளார். இதில் சலைத்ராணிக்கும், கார்த்திக்கும் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஞானசேகரின் 16வயது மூத்த மகள் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு ஞானசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் அச்சங்குளம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் மற்றும் பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தது மீன் வியாபாரி ஞானசேகர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் ஞானசேகரை கொலை செய்ய அவரது மனைவி, மகள் மற்றும் மகளின் காதலன் கார்த்திக் மூன்று பேரும் திட்டம் போட்டுள்ளனர்.
நேற்று இரவு ஞானசேகர் தூங்கியதும். அவரது மகள் தனது காதலன் கார்த்திக்கு தந்தை உறங்கி விட்டார் வீட்டுக்கு வரும்படி மெசேஜ் அனுப்பி உள்ளார். இதையடுத்து கார்த்திக்கும் வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ஞானசேகரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். அவர் உயிரிழந்தது தெரிந்ததும் சடலத்தை காரில் ஏற்றிக்கொண்டு அச்சங்குளம் காட்டுப் பகுதியில் போட்டு பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து கார்த்திக் என்ற கருப்பசாமி, சலைத்ராணி மற்றும் அவரது மகள் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவரை மனைவி மற்றும் மகள், மகளின் காதலன் சேர்ந்து அடித்து கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.