Categories: தமிழகம்

தாயுடன் தகாத தொடர்பு… மகளுடன் காதல் : ஒரே வீட்டில் உல்லாசம் அனுபவித்த இளைஞர் : தட்டிக் கேட்ட மீனவரை கொலை செய்து எரித்த கொடூரம்!!

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மீன் வியாபாரி கொலை செய்த சம்பவம் குறித்து மனைவி, மகள் மற்றும் மகளின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஞானசேகர் (வயது 42). இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சலைத்ராணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது வீடு அருகில் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்ற கார்த்திக் (வயது 24) என்பவர் மரப்பட்டறை வைத்துள்ளார். இதில் சலைத்ராணிக்கும், கார்த்திக்கும் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஞானசேகரின் 16வயது மூத்த மகள் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு ஞானசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் அச்சங்குளம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் மற்றும் பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தது மீன் வியாபாரி ஞானசேகர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் ஞானசேகரை கொலை செய்ய அவரது மனைவி, மகள் மற்றும் மகளின் காதலன் கார்த்திக் மூன்று பேரும் திட்டம் போட்டுள்ளனர்.

நேற்று இரவு ஞானசேகர் தூங்கியதும். அவரது மகள் தனது காதலன் கார்த்திக்கு தந்தை உறங்கி விட்டார் வீட்டுக்கு வரும்படி மெசேஜ் அனுப்பி உள்ளார். இதையடுத்து கார்த்திக்கும் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ஞானசேகரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். அவர் உயிரிழந்தது தெரிந்ததும் சடலத்தை காரில் ஏற்றிக்கொண்டு அச்சங்குளம் காட்டுப் பகுதியில் போட்டு பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கார்த்திக் என்ற கருப்பசாமி, சலைத்ராணி மற்றும் அவரது மகள் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவரை மனைவி மற்றும் மகள், மகளின் காதலன் சேர்ந்து அடித்து கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

18 minutes ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

1 hour ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

3 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

4 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

5 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

6 hours ago

This website uses cookies.