நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு.. திண்டுக்கல்லில் பரபரப்பு!!!
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் சீலப் பாடியைச் சேர்ந்த ஆண்டிமடம் ஆறுமுகம் என்பவர் மோதிரம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவர் நேற்று மாலை முள்ளிப்பாடி, மா.மு.கோவிலூர், பெரிய கோட்டை உள்ளிட்ட கிராமப்புறங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . பின்னர் இரவு தனது அலுவலகம் முன்பாக தனது சொந்த காரினை நிறுத்தி வைத்து உள்ளார்.
காலை பிரச்சாரம் செல்வதற்காக காரை எடுக்க சென்ற போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்த போது இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்களில் ஒருவர் கார் அருகே கிடந்த கல்லை எடுத்து கார் கண்ணாடியை உடைத்து விட்டு ,மீண்டும் காரில் சென்றுள்ளது பதிவாகி இருந்தது .
போலீஸ் டி ஐ ஜி முகாம் அலுவலகம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதி அருகே நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.