கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குள்ளக்காபாளையம் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் 45 வயதான ஜெயக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள 30 அடி கிணற்றில் செல்போன் தவறி விழுந்து விட்டதால் அதனை எடுப்பதற்காக குடிபோதையில் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
ஆனால் மேலே வர முடியாமல் 20 அடி ஆழ தண்ணீரில் தத்தளித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் கணபதி தலைமையிலான தீயணைப்பு துறையினர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த ஜெயக்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் விடாமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், ஜெயக்குமாரை உயிருடன் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.பலத்த மழை, மிகுந்த இருள் சூழ்நிலையும் கடும் குளிரையும் என எதையும் பொருட்படுத்தாமல் இக்கட்டான சூழ்நிலையில் தீயணைப்பு வீரர் மகேந்திரன் கிணற்றில் இறங்கி உயிருக்காக போராடி கொண்டிருந்த ஜெயக்குமாரை உயிருடன் மீட்டனர்.
கடுமையான சூழலில் குடிபோதையில் கிணற்றில் விழுந்த நபரை மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் கைதட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.