ராணிப்பேட்டை அருகே பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவருக்கு தொடையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிப்காட் அடுத்த கொண்டக்குப்பம் பகுதி சேர்ந்தவர் முத்து(22). அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது உறவினர்கள் விடுமுறை நாட்களில் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்ப கொண்டக்குப்பம் பகுதியிலிருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு அவர்களது உறவினரை அழைத்து வந்து ரயில் ஏற்றிவிட்டுள்ளார்.
பிறகு மீண்டும் செட்டித்தாங்கல் வழியாக கொண்டக்குப்பம் பகுதியை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அவரது செல்போன் (narzo 50A android mobile) திடீரென வெடித்தது. இதில், தொடை பகுதியில் காயம் ஏற்பட்ட முத்து வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.