ராணிப்பேட்டை அருகே பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவருக்கு தொடையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிப்காட் அடுத்த கொண்டக்குப்பம் பகுதி சேர்ந்தவர் முத்து(22). அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது உறவினர்கள் விடுமுறை நாட்களில் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்ப கொண்டக்குப்பம் பகுதியிலிருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு அவர்களது உறவினரை அழைத்து வந்து ரயில் ஏற்றிவிட்டுள்ளார்.
பிறகு மீண்டும் செட்டித்தாங்கல் வழியாக கொண்டக்குப்பம் பகுதியை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அவரது செல்போன் (narzo 50A android mobile) திடீரென வெடித்தது. இதில், தொடை பகுதியில் காயம் ஏற்பட்ட முத்து வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.